இனியபாரதிக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

judge
judge

கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் இனியபாரதி எதிர்வரும் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அக்கரைப்பற்று மேலதிக நீதிவான் பி.சிவகுமார் நேற்று(24) இவ் உத்தரவினை பிறப்பித்தார்.

அம்பாறை – திருக்கோவில், அக்கரைப்பற்று – ஆலையடிவேம்பு ஆகிய பிரதேசங்களில் 2006ம் ஆண்டு தொடக்கம் 2009ம் ஆண்டு வரை 7 பேர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பாகவே இனியபாரதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.