யாழில் 4 கோரிக்கைகளை முன்வைத்து உணவு ஒறுப்பு போராட்டம்!

protest
protest

யாழ். மாநகர சபையின் சுகாதார ஊழியர்கள் கடந்த இரு நாட்களாக பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுவந்த நிலையில் இன்று (24) தொடர்ச்சியான உணவு ஒறுப்பு போராட்டத்தினை ஆரம்பித்துள்ளனர்.

நான்கு அம்சக் கோரிக்கையை முன்வைத்து யாழ்ப்பாண மாநகர சபையின் சுகாதார ஊழியர்கள் யாழ்ப்பாண மாநகர சபை முன்றலில் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் ஆரம்பித்த பணிப் புறக்கணிப்பிற்கு இன்றுவரை தமக்கான தீர்வு வழங்கப்படவில்லை என தெரிவித்து உணவு ஒறுப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.