சிறந்த விவசாயிகள், பண்ணையாளர்கள் கௌரவிப்பு!

7 4
7 4

சிறந்த விவசாயிகள் மற்றும் பண்ணையாளர்கள் கௌரவிப்பு விழா முல்லைத்தீவு மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் விவசாய பணிப்பாளர் பூ.உகநாதன் தலைமையில் நேற்று (23) நடைபெற்றது.

விவசாயமும் கமநல சேவைகளும் மற்றும் கால்நடை அபிவிருத்தி நீர்ப்பாசனம் நீர் வழங்கல் மற்றும் சுற்றாடல் அமைச்சு வட மாகாணம் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பில் இந்நிகழ்வு நடைபெற்றது.

இதில் பிரதம விருந்தினராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத்தலைவருமான சதாசிவம் கனரத்தினம் கலந்து கொண்டார்.

சிறப்பு விருந்தினர்களாக புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் ரவிகரன் அவர்களும் கலந்துகொண்டனர்.

இதில் முல்லைத்தீவு மாவட்டத்தின் சிறந்த விவசாயிகள் மற்றும் பணியாளர்கள் கௌரவிக்கப்பட்டு பரிசில்களும், சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது.