காவற்துறை உத்தியோகத்தர்களுக்கு பதவி உயர்வு

sl police
sl police

நீண்ட காலமாக பதவி உயர்வுகள் வழங்கப்படாதிருந்த காவற்துறை உத்தியோகத்தர்கள் 31 ஆயிரம் பேருக்கு பதவி உயர்வுகள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய முன்னெடுக்கப்படுவதாக ஜனாதிபதி ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

3 கட்டங்களாக பதவிக்குத் தரமுயர்த்தப்படவுள்ளனர்.

பதவி உயர்விற்காக காவற்துறை ஆணைக்குழு மற்றும் நீதி அமைச்சின் முகாமைத்துவ சேவை திணைக்களத்தின் அனுமதியும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவற்துறை அதிகாரிகள் 7 ஆயிரத்து 824 பேருக்கு முதல் கட்டமாக பதவி உயர்வு வழங்கப்பட்டவுள்ளது.

2019 ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் இந்தப் பதவி உயர்வுகள் வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி
ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.