நீண்ட காலமாக பதவி உயர்வுகள் வழங்கப்படாதிருந்த காவற்துறை உத்தியோகத்தர்கள் 31 ஆயிரம் பேருக்கு பதவி உயர்வுகள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய முன்னெடுக்கப்படுவதாக ஜனாதிபதி ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
3 கட்டங்களாக பதவிக்குத் தரமுயர்த்தப்படவுள்ளனர்.
பதவி உயர்விற்காக காவற்துறை ஆணைக்குழு மற்றும் நீதி அமைச்சின் முகாமைத்துவ சேவை திணைக்களத்தின் அனுமதியும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவற்துறை அதிகாரிகள் 7 ஆயிரத்து 824 பேருக்கு முதல் கட்டமாக பதவி உயர்வு வழங்கப்பட்டவுள்ளது.
2019 ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் இந்தப் பதவி உயர்வுகள் வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி
ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.