அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை நியமிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நேற்று (24) இடம்பெற்ற தெரிவுக் குழுக் கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு, அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு, அரசாங்க நிதி பற்றிய குழு ஆகியவற்றுக்கான உறுப்பினர்களும் இங்கு பெயரிடப்பட்டுள்ளனர்.
அடுத்த மாதம் 05ம் நாள் இப்பெயர்கள் சபையில் அறிவிக்கப்பட்டு இக் குழுக்களுக்கான தலைவர்களின் தெரிவு, உறுப்பினர்களின் உறுதிப்படுத்தல்களுடன் மேற்கொள்ளப்படும்.