அதிக வேகத்தால் ஐந்துபேருக்கு நேர்ந்த சோகம்

9 Thre
9 Thre

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் முச்சக்கர வண்டியொன்றும்,மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த ஐவர் படுகாயங்களுக்குள்ளான நிலையில் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்விபத்துச் சம்பவம் நேற்றிரவு   இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கந்தளாய் வாத்தியாகம சந்தியில் இடம்பெற்ற இவ்விபத்தில் கந்தளாய் பகுதியியைச் சேர்ந்த நிலந்த குமார வயது(23),சோமபால வயது(45),நிரோசன் வயது(19),மற்றும் 32 வயதுடைய ஐவரே இவ்வாறு படுகாயங்களுக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அதிக வேகமாக சென்றதையடுத்தே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர் .விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்