2020 ஆம் ஆண்டுக்கான ஹஜ் ஏற்பாடுகளை அரசாங்கம் பொறுப்பேற்று மேற்கொள்வதற்கு பிரதமரும் கலாசார அமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்.
பிரதமர் ஹஜ் குழுவினருடன் நடாத்திய கலந்துரையாடலின் போதே இந்த இறுதித்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
ஹஜ் முகவர்களில் பலர் ஊழல் மோசடிகளில் ஈடுபடுவதையும் ஹஜ் யாத்திரிகர்களிடமிருந்து கூடுதலான பணத்தை அறவிடுவதையும் கருத்திற்கொண்டு இலங்கை ஹஜ் யாத்திரிகர்களின் நலன்கருதி இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் ஹஜ் முகவர்கள் சிலரின் ஏமாற்று நடவடிக்கைகள் காரணமாக அநேக ஹஜ் யாத்திரிகர்கள் பல அசெளகரியங்களுக்குட்பட்டதாலும் மற்றும் சில ஹஜ் யாத்திரிகர்கள் உரிய கட்டணம் செலுத்தியும் கடமையை நிறைவேற்ற முடியாமல் போனதையும் கவனத்திற் கொண்டு பிரதமரால் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.