கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் சீன நாட்டினருக்கான விசா வழங்கும் நடவடிக்கையில் இலங்கை அரசாங்கம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
சீனாவிலிருந்து வருபவர்கள் மூலம் இலங்கைக்குள் கொரோனா வைரஸ் தொற்றும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனினும் இலங்கையில் உள்ள சீன இனத்தவர்கள் அவர்களது நாட்டிற்கு செல்வதில் எந்த கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை.