இலங்கையில் முதலாவது கொரோனா வைரஸ் நோயாளி கண்டுபிடிப்பு!

coronavirus ce qu il faut savoir 1
coronavirus ce qu il faut savoir 1

கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட முதலாவது நோயாளர் இலங்கையில் கண்டறியப்பட்டுள்ளார்.

இலங்கையில் தங்கியிருக்கும் சீன நாட்டுப் பெண் ஒருவரே கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் என சுகாதார மேம்பாட்டுக்கு பணியகம் அறிவித்துள்ளது.

நேற்று (27) வியாழக்கிழமை மாலை பரிசோதனை ஊடாக சீன நாட்டுப் பெண் ஒருவருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை பரிசோதனையின் ஊடாகக் கண்டறியப்பட்டுள்ளது.

அவர் சீனாவில் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட ஹூபே மாகாணத்திலிருந்து இலங்கைக்கு வருகை தந்துள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீன நாட்டுப் பெண் (வயது-43) தற்போது இலங்கை நோயியல் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.