மட்டக்களப்பு மாவட்ட புதிய அரசாங்க அதிபர் பதவியேற்பு

kalamathi 1
kalamathi 1

மட்டக்களப்பு மாவட்ட புதிய அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா, உத்தியோகபூர்வமாக நேற்று (27) தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள ஸ்ரீசித்திவிநாயகர் ஆலயத்தில் ஸ்ரீ கேதீஸ்வரக் குருக்கள் தலைமையில் நடைபெற்ற விசேட பூஜையில் கலந்த கொண்டதன் பின்னர் தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

பின்னர் மட்டக்களப்பு நகரிலுள்ள இஸ்லாம், கிறிஸ்தவ பௌத்த தலங்களுக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார்.

தனது கடமையேற்பின் போது பொதுமக்களின் தேவையை உரிய நேரத்துக்குள் நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும், அதற்குத் தேவையான அர்ப்பணிப்பை உத்தியோகத்தர்கள் வழங்கவேண்டுமென, உத்தியோகத்தர்களிடம் கேட்டுக் கொண்டார்.

கலாமதி, 30 வருடகால யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளையும் கட்டியெழுப்பத் தேவையான நடவடிக்கைகளை தன்னால் முடிந்தளவு முன்னெடுப்பதாகவும் தெரிவித்தார்.