பின் கதவால் வந்த சுமந்திரன் எங்களை கட்டுப்படுத்த எவ்வித தகுதியும் இல்லை – சரவணபவன் எம்.பி காட்டம்

saravanapavan 2
saravanapavan 2

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தனக்கு தமிழரசுக்கட்சி ஆசனம் வழங்கக் கூடாது என தெரிவிப்பதற்கு சுமந்திரனிற்கு எவ்வித தகுதியும் இல்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் விசனம் வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தனக்கு ஆசனம் வழங்கக்கூடாது என தமிழரசுக்கட்சித் தலைவர் மாவை.சேனாதிராசாவிடம் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் கேட்டிருந்ததாக இணையத்தள செய்திகளினூடாக அறிந்திருந்தேன்.

எனினும் இது தொடர்பில் சுமந்திரன் முடிவு செய்ய இயலாது எனவும் அதனை கட்சியின் தேர்தல் நியமனக் குழுவே முடிவு செய்யும்.

சுமந்திரனின் கருத்து தொடர்பில் ஆதாரப்படுத்தி தமிழரசுக்கட்சியின் எதிர்வரும் கூட்டத்தில் கேட்க இருப்பதாகவும் இதன் போது தெரிவித்தார்.

சுமந்திரனைப் பொறுத்த மட்டில் எங்களது வாக்குகள் மூலமே தேசியப்பட்டியல் மூலம் முதலில் நாடாளுமன்றம் நுழைந்தவர் எனவும் அதன் பின்னர் போட்டியிட்டு வந்ததிருந்தார்.

அத்துடன் தான் தொடர்ச்சியாக இரண்டு தடவைகள் பொதுத்தேர்தலில் வெற்றி பெற்றிருப்பதாகவும் அவ்வாறானவர்களையே கட்சி தொடர்ந்து வைத்திருக்க விரும்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.