இலங்கை போக்குவரத்து சபையின் வட பிராந்திய முகாமையாளரிற்கும் முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர் கனகரத்தினத்திற்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பு முல்லைத்தீவு பேருந்து நிலையத்தில் நேற்று (29) இடம்பெற்றது.
இச்சந்திப்பின் போது இயங்காமல் நிற்கும் புதிய பேருந்துகளை செயற்படுத்துவதற்கும் முல்லைத்தீவு இலங்கை போக்குவரத்து சபை பேருந்து நிலைய வருமானத்தை அதிகரிப்பது பற்றியும் கலந்துரையாடப்பட்டது
மேலும் புதிதாக யாழ்ப்பாணத்திற்கு அதிகாலை 4 மணி அளவில் முல்லைத்தீவிலிருந்து புறப்படக் கூடியவாறு ஒரு பேருந்தினை உடனடியாக இயக்குவதற்கும், ஒதியமலைக்கு புதிய வழித்தடம் ஒன்றை அமைப்பது தொடர்பாகவும், மாலையில் கொழும்பு புறப்படக் கூடிய கூடிய வழித்தடம் ஒன்றை விரைவில் உருவாக்குவதற்கும் ஆலோசனை வழங்கி நடவடிக்கை எடுக்குமாறு ஒருங்கிணைப்புக் குழுத்தலைவரால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.