நாடாளுமன்ற உறுப்பினர்களான அஜித் பி பெரேரா மற்றும் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா ஆகியோர் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
கட்சியின் ஒழுக்க விதிகளை மீறியதாக தெரிவித்து கட்சியின் புதிய செயற்குழு உறுப்பினர்கள் நியமனத்தில் இவ்விருவரும் உள்வாங்கப்படவில்லை.
அதற்கிணங்க இன்று (30) பிற்பகல் நடைபெறும் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் குறித்த இருவரும் பங்கேற்கமாட்டார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.