கொரோனா என்ற பிசாசை வீழ்த்துவோம் – சீன ஜனாதிபதி அதிரடி

unnamed 2
unnamed 2

கொரோனா வைரஸை ‘பிசாசு’ என கூறியுள்ள சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், “அந்த பிசாசை வீழ்த்துவோம்” என உறுதியாக தெரிவித்துள்ளார்.

சீனாவின் ஹுபே மாகாணம் யுகான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் சீனா முழுவதும் வேகமாக பரவி வருகிறது.

சீனாவில் இந்த வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 132ற்கும் மேலாகவும், இவ்வைரஸ் தாக்குதல் உறுதியாகி உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை 5,974 ஆக உயர்ந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், தாய்லாந்து, பிரான்ஸ், அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா உள்ளிட்ட 17 நாடுகளில் குறைந்தது 47 பேருக்கு இந்நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளன.

அத்தோடு மேற்படி வைரஸின் பாதிப்பை கட்டுப்படுத்தும் முயற்சியில் உலக விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ள அதேவேளை, சீன ஜனாதிபதி ஜின்பிங் நேற்று(29) பெய்ஜிங்கில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம்மை சந்தித்து பேச்சு வார்த்தை நடாத்தியுள்ளார்.