கூட்டமைப்பினர் யாழ் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தை புறக்கணிக்க தீர்மானம்?

tna
tna

அங்கஜன் இராமநாதன் தலைமையில் இன்று இடம்பெறவுள்ள யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் புறக்கணிக்கத் தீர்மானத்துள்ளதாக தெரிய வருகிறது.

யாழ் மாவட்டச் செயலகத்தில் இன்று (31) ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது.

இக் கூட்டத்திற்கான அழைப்பு மாவட்டச் செயலாளர் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தை கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் புறக்கணிக்கின்ற அதே வேளையில் கூட்டமைப்பின் உள்ளுராட்சி மன்றங்களின் தவிசாளர்கள் கலந்த கொள்வார்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது விஜயகலா மகேஸ்வரன், மாவை.சேனாதிராசா, க.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டங்களை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி இன் செயலாளர் நாயகம் கலந்து கொள்ளாமல் தவிர்த்து வந்திருந்தார்.

இவ்வாறான நிலையில் தற்போது புதிய அரசாங்கம் வந்திருக்கின்ற நிலையில் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவராக அங்கஜன் இராமநாதன் நியமிக்கப்பட்டிருந்தார்.

இதற்கமைய மாவட்ட முதலாவது ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நாளை இடம்பெறவுள்ளது. இந்தக் நிலையிலையே கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தைப் புறக்கணிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.