இலங்கை வரலாற்றில் குறுகிய காலப்பகுதிக்குள் வைத்திய முகாம்

thiyathalawa1 2
thiyathalawa1 2

சீனாவிலிருந்து இலங்கை திரும்பும் பல்கலைகழக மாணவர்களுக்கு அவசர சிகிச்சை அளிப்பதற்காக வைத்திய முகாம் ஒன்று அமைக்கப்பட்டு வருகின்றது.

குறித்த வைத்திய முகாம் 48 மணி நேரத்திற்குள் இலங்கை இராணுவத்தினரால் அமைக்கப்பட்டு வருகிறது.

இரண்டு அறைகள் கொண்ட இந்த வைத்திய முகாமில் சீனாவிலிருந்து வரும் மாணவர்கள் இரண்டு வாரங்கள் தங்கவைக்கப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தபடுவார்கள்.

சீனாவில் கொரோனா வைரஸ் வேகத்தில் பரவி வருகின்ற நிலையில் அங்குள்ள இலங்கை மாணவர்களை நாட்டுக்கு அழைத்து வருகின்ற செயற்பாடுகள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அவ்வாறு அழைத்து வருபவர்களை உடனடியாக வீட்டுக்கு அனுப்பாமல் தியத்தலாவ இராணுவத்தின் எஸ்.எஸ். கமாண்டோர் மேஜர் ஜெனரல் வடுகே தலைமையில் இராணுவ வைத்தியசாலை வளாகத்திற்குள் அமைக்கப்பட்டுள்ள வைத்திய முகாமில் தங்க வைத்து இரு வாரங்கள் பரிசோதித்து விடுவிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கை வரலாற்றிலேயே ஒரு குறுகிய காலப்பகுதிக்குள் வைத்திய முகாம் அமைக்கபடுகின்றமை இதுவே முதல் சந்தர்ப்பமாகும்.