ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய அறுவரின் விளக்கமறியல் நீடிப்பு

Courtscourt
Courtscourt

ஈஸ்டர் குண்டு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய 6 பேரையும் எதிர்வரும் 14ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இந்த உத்தரவை இன்று (31) பிறப்பித்துள்ளது.

கொழும்பு சங்ரில்லா விடுதியில் தற்கொலை குண்டுதாக்குதலை மேற்கொண்ட மொஹமட் ஹில்ஹாம் அஹமட் என்ற குண்டுதாரியின் தந்தை உள்ளிட்ட 6 பேரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.