மதுபோதையில் யாழ்ப்பாணத்திலிருந்து அக்கறைப்பற்று வரை பயணித்த இலங்கை போக்குவரத்து சபை சாரதி பணி நீக்கம் செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது,
போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீரவால் போக்குவரத்து அமைச்சின் செயலாளர் காமினி செனவிரத்னவுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
குறித்த சாரதி நேற்று யாழ்ப்பாண பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையிலேயே, அமைச்சர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
நேற்றைய தினம் (30) யாழ்ப்பாணத்திலிருந்து அக்கரைப்பற்றுக்கு புறப்படும் பேருந்து நாவற்குழி சோதனைச் சாவடியில் மறிக்கப்பட்டு சோதனையிட முற்பட்ட போது, சாரதி மதுபோதையில் இருந்தமை கண்டறியப்பட்டது.
இதனையடுத்து 46 பயணிகளையும் மற்றொரு பேருந்தில் அக்கரைப்பற்றுக்கு அனுப்பி வைக்கப்பட்டு இலங்கை போக்குவரத்துச் சபையின் கோண்டாவில் சாலை முகாமையாளருக்கு இராணுவத்தினரால் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.