கொழும்புக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையில் நேரடி விமான சேவை ஆரம்பம்

62 d
62 d

இன்று முதல் கொழும்புக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையில் நேரடி விமான சேவை ஆரம்பமாகிறது.

உள்நாட்டு விமான சேவையை மேம்படுத்தும் அரசாங்கத்தின் கொள்கையின்படி இந்த சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனை அறிவித்துள்ளார்.

இந்த சேவை ஆரம்பிக்கப்பட்ட பின்னர் மட்டக்களப்பு, மத்தளை ஆகிய இடங்களுக்கும் விமான சேவைகள் விஸ்தரிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துக்கும் ரத்மலானை விமான நிலையத்துக்கும்இடையில் ஆரம்பமாகும் விமானசேவையின்போது 70 ஆசனங்களைக் கொண்ட ஏ.டீ.ஆர் 72 என்ற விமானம் பயன்படுத்தப்படவுள்ளது.