சீனர்களின் நடமாட்டத்தை, கட்டுப்படுத்த அறிவுரை

1 e g
1 e g

சீனாவின் வதிவிட விசாவை கொண்டுள்ள நிர்மாணத்துறையினருக்கு குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நேற்று அறிவுறுத்தல் ஒன்றை விடுத்துள்ளார்.

தமது பணியாளர்களின் நடமாட்டத்தை நிர்மாண பிரதேசத்துக்குள்ளும், வசிப்பிடங்களுக்குள்ளும் கட்டுப்படுத்துமாறு அவர் தமது அறிவுறுத்தலில் கோரியுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவியுள்ள சீனாவில் இருந்து பல பணியாளர்கள் அண்மையில் வந்துள்ளமையை அடுத்தே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு இரண்டு வாரங்களின் பின்னரே குணங்குறிகள் தென்பட தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.