துப்பாக்கிச் சூட்டு காயத்துடன் ஆணின் சடலம் கண்டெடுப்பு

1 wed
1 wed

மட்டக்களப்பு புனானை – ஓமனியாமடு காட்டுப்பகுதியில் துப்பாக்கிச் சூட்டு காயத்துடன் ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் கடந்த 25 ம் திகதி வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், இவ்வாறு சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். அத்தோடு, அவரது சடலத்துக்கு அருகில் சொட்கண் துப்பாக்கியொன்றும் மீட்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த நபர் தன்னைதானே சுட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

ஒமனியாமடு பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய மயில்வானம் பிரசாந்தன் என்பவரே இவ்வாறு சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.