தமிழீழ விடுதலை இயக்கத்தின் சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள்

5 ad
5 ad

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழீழ விடுதலை இயக்கத்தின்  சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி, முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், தமிழீழ விடுதலை இயக்கத்தின் இளைஞர் அணியின் தலைவரும் சட்டத்தரணியுமான என்.கமலதாஸ் ஆகியோரின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் கட்சியின் செயற்குழுக் கூட்டம் இன்று   காலை மட்டக்களப்பில் உள்ள கட்சித் தலைமையகத்தில் இடம்பெற்றது.

இந்தக் கூட்டத்தில் கட்சியின் பிரதி தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாணசபையின் பிரதி தவிசாளருமான பிரசன்னா இந்திரகுமார், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள், உள்ளுராட்சி மன்றப் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

எதிர்வரும் காலத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அவற்றினை எதிர்கொள்ளுதல், கட்சியின் வேட்பாளர்களை அறிவித்தல் உட்பட பல்வேறு நடவடிக்கைகள் குறித்து இங்கு ஆராயப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் எட்டு வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடவுள்ள நிலையில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் சார்பில் இரண்டு உறுப்பினர்கள் களமிறங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.