மருதமுனையில் மாபெரும் இரத்ததான முகாம்

22222
22222

உதிரம் கொடுப்போம் உயிரைக் காப்போம் எனும் தொனிப்பொருளில் இலங்கையின் 72ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இரத்ததான முகாம் நேற்று (02) மருதமுனை ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத்தின் கிளையில் இடம் பெற்றது.

இந்நிகழ்வானது கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் அனுசரணையுடன் இரத்ததான வங்கி பிரிவின் ஒத்துழைப்புடன் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் இரத்ததான வங்கிப்பிரிவின் வைத்தியர் என்.ரமேஷ், ஊழியர்கள், மருத்துவ தாதி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டு தனது சேவைகளை முன்னெடுத்தார்கள்.