சாதனை படைத்தது இந்தியா!

AP20024281227982
AP20024281227982

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவதும் இறுதியுமான ரி-20 போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று 5-0 என்ற கணக்கில் நியூசிலாந்தை ‘வயிற் வோஷ்’ செய்து சாதனை படைத்துள்ளது.

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 5ஆவதும் இறுதியுமான ரி-20 போட்டி மவுண்ட் மவுங்கானுயில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது. இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பாட்டத்தைத் தேர்வு செய்தது.

அதன்படி களமிறங்கிய அவ்வணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 163 ஓட்டங்களை எடுத்தது. இந்திய அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக ரோஹித் சர்மா 60 ஓட்டங்களையும், கே.எல்.ராகுல் 45 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர். நியூசிலாந்து அணியின் பந்துவீச்சில் குகலிஜின் 2 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.

பின்னர் 164 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

நடுவரிசையில் களமிறங்கிய ரோஸ் டெய்லர் அரைச்சதம் குவிக்க நியூசிலாந்து அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 156 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது. இதனால் இந்தியா 7 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகளிலும் வெற்றி பெற்று நியூசிலாந்தை வயிட் வோஷ் செய்து சாதனைப் படைத்தது இந்தியா. 3 விக்கெட்டுகளை வீழ்த்திய பும்ரா ஆட்ட நாயகன் விருதை வென்றார். லோகேஷ் ராகுல் தொடரின் நாயகன் விருதை வென்றார்.