சபாநாயகர் கரு ஜயசூரியவின் விசேட அறிக்கை

karu jayasuriya 1
karu jayasuriya 1

ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குமாறு தாம் எழுத்து மூலம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுவது உண்மைக்கு புறம்பானது என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் களமிறக்குமாறு பல்வேறு தரப்பினரிடமிருந்து கிடைத்த கோரிக்கைகளுக்கு பதிலளிக்கும் வகையில் கரு ஜயசூரியவினால் கடந்த 17 ஆம் திகதி அறிக்கை ஒன்று வௌியிடப்பட்டது.

அதில் கொள்கை ரீதியான சில விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ள போதிலும், ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குமாறு தாம் கோரவில்லை என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்குமாறு எவ்வித வேண்டுகோளும் விடுக்கவில்லை என கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.