சஜித்தை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்க வேண்டும்- 72 மணிநேர காலக்கெடு!

Sajith Ranil
Sajith Ranil

ஜனநாயக மக்கள் சக்தி இயக்கத்தின் தலைவர் எம்.என்.எம்.ஹசீம் கொழும்பில் இன்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க 72 மணித்தியாலங்களுக்குள் சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர், பிரதமர் ரணில் விக்ரமசிங்க என்ன செய்கிறார்? எல்லா மக்களினதும் அன்பையும் பெற்ற சஜித் பிரேமதாஸ ஜனாதிபதியாக வருவதை தடை செய்வதற்காக தற்போது அவர் இல்லாத சட்டத்திட்டங்களை கொண்டு வந்து தான் தலைமைத்துவத்தினை பெற்றுக்கொள்வதற்கான எல்லா விதமான சூழ்ச்சிகளையும் செய்து வருகிறார்.

எனவே சஜித் பிரேமதாஸ ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட வேண்டும் என 72 மணிநேர காலக்கெடுவினை விதித்துள்ளார். அவ்வாறு இல்லையென்றால் மக்கள் அனைவரும் இணைந்து வீதிக்கு இறங்கி போராடுவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.