இலங்கையின் 72 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் சிறைச்சாலையிலிருந்து இன்று (04) 17 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இதில் ஒரு பெண்மணி உட்பட 16 ஆண்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள்.
விடுதலை செய்யப்பட்டவர்கள் சிறு குற்றங்கள் புரிந்து தண்டப்பணம் செலுத்த முடியாமல் சிறையில் தடுத்துவைக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.