உபாதை காரணமாக நியூஸிலாந்து அணிக்கு எதிராக இடம்பெறவுள்ள சர்வதேச ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளில் இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ரோஹிட் சர்மா பங்கேற்க மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூஸிலாந்து அணிக்கு எதிராக நேற்று முன்தினம் வெலிங்ரணில் இடம்பெற்ற ஐந்தாவதும், இறுதியுமான 20 க்கு 20 போட்டியின்போது ரோஹிட் சர்மா உபாதைக்கு உள்ளானார்.
இந்த நிலையில், நியூஸிலாந்து அணிக்கு எதிராக அடுத்து இடம்பெறவுள்ள சர்வதேச ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளில் அவர் பங்கேற்க மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச கிரிக்கட் தொடர்பில் நாளை ஹமில்ரணில் ஆரம்பமாகவுள்ளது.