கஞ்சிபான இம்ரான் 04 ஆம் திகதி வரை விளக்கமறியலில்

kanjipana
kanjipana

பொலிஸ் அதிகாரிகள் இருவருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்த, தற்போது சிறையில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலக குழு உறுப்பினரான கஞ்சிபான இம்ரானை எதிர்வரும் 04 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக பொலிஸார் இன்று நீதிமன்றிற்கு அறிவித்தனர்.

அதன்படி முன்வைக்கப்பட்ட விடயங்களை கருத்திற் கொண்ட நீதவான் சந்தேகநபரை எதிர்வரும் 04 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார். வௌிநாட்டில் இருந்த கஞ்சிபானி இம்ரான் தொலைப்பேசி மூலம் சுற்றிவளைப்பில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்து , தகாத வார்த்தைகளால் தூற்றியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.