நிறைவேற்று ஜனாதிபதிமுறை தேவையா இல்லையா- ரணில் தெரிவிப்பு

RANIL 3
RANIL 3

மீரிகம பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்துச் செய்வதற்கு அந்தந்த கட்சிகள் தான் தீர்மானிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இதன்போது நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டம் தொடர்பில் பிரதமர் கருத்து தெரிவிக்கையில்

நிறைவேற்று ஜனாதிபதிமுறை தேவையா இல்லையா என்பது தொடர்பில் அனைத்து கட்சிகளும் தீர்மானிக்க வேண்டும் எனவும் இந்தப் பிரச்சினை தொடர்பில் ஒரு திறந்த கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், தேர்தல் ஒன்று இடம்பெறவுள்ள நிலையில் இது தொடர்பில் கலந்துரையாடாமல் இருக்க முடியாது எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.