பொருளாதார வல்லுநர் மனோ தித்தவெல காலமானார்

6 jjd
6 jjd

பொருளாதார வல்லுநரும் அரசதுறைச் சார்ந்த உயரதிகாரியுமான மனோ தித்தவெல நேற்றுமுன்தினம் தனது 59ஆவது வயதில் அவுஸ்திரேலியா, மெல்பர்ன் நகரில் காலமானார்.

நிதியமைச்சின் முன்னாள் சிரேஷ்ட ஆலோசகராகவும் இலங்கை காப்புறுதி ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் தலைவராகவும் இவர் பணியாற்றினார். அத்துடன் அவர் கடந்த அரசாங்கத்தில் நல்லிணக்க பொறிமுறைக்கான இணைப்புச் செயலாளராகவும் செயற்பட்டு வந்துள்ளார்.

இவர் 2003 ஆகஸ்ட் தொடக்கம் 2005 நவம்பருக்கிடைப்பட்ட காலப்பகுதியில் பொருளியல் விவகாரங்களுக்கான சிரேஷ்ட ஜனாதிபதி ஆலோசகராகவும் ஜனாதிபதி அலுவலகத்தின் சிரேஷ்ட பணிப்பாளர் நாயகமாகவும் கடமையாற்றியுள்ளார்.

றோயல் கல்லூரியின் பழைய மாணவரான இவர் சில காலம் நோய்வாய்பட்டிருந்தார். மெல்பர்னிலுள்ள வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் 08 ஆம் திகதி சனிக்கிழமை மெல்பர்னில் நடைபெறவிருப்பதாகவே அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.