ஜனாதிபதி பொது மன்னிப்பு – 5 படையினர் விடுதலை

73
73

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு படைகளை சேர்ந்த 5 பேர் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

அரசியலமைப்புச் சட்டத்தில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய இந்த 5 படையினருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பை வழங்கியுள்ளார்.

இந்த படையினர் சிறிய குற்றச் செயல்களுக்காக சிறைத் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் என கூறப்படுகிறது.

இவர்களுடன் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் 517 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.