கொரோனாவில் இருந்துவிடுபட விசேட பூஜை

IMG 5057
IMG 5057

நாடளாவிய ரீதியில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி உள்ள கொரோனா வைரஸின் தாக்கம் நாட்டிலிருந்து முழுமையாக நீக்கப்பட வேண்டும் என்றும் ,வைரஸினால் பாதிக்கப்பட்ட அனைவரும் சுகம் பெற வேண்டியும் நேற்றுமுன்தினம் இரவு 8.30 மணியளவில் மன்னார் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் விசேட பூஜை வழிபாடுகள் மற்றும் பிரித்தோதல் என்பன இடம்பெற்றது .

பூஜை வழிபாட்டு நிகழ்விற்கு மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன், மன்னார் மாவட்டத்திலுள்ள பிரதேச செயலாளர்கள், கிராம சேவகர்கள்,அரச உத்தியோகத்தர்கள் , பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் மற்றும் பொது மக்கள் பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.