சுனில் ஹந்துன்நெத்தி முக்கிய அறிவிப்பு

2 ed
2 ed

அரச நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்றக்குழுவான கோப் முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைக்காக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், தேசிய லொத்தர் சபை மற்றும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபை ஆகியவற்றை தமது குழுவின் முன்னால் முன்னிலையாகுமாறு அழைத்துள்ளது.

செய்தியாளர்கள் மத்தியில் கோப் குழுவின் தலைவர் சுனில் ஹந்துன்நெத்தி இந்த விடயத்தை அறிவித்துள்ளார்.

எதிர்வரும் 18, 19 மற்றும் 20ஆம் திகதிகளில் இந்த நிறுவனங்களின் பிரதிநிதிகள் கோப் குழுவின் முன்பாக முன்னிலையாக வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

கோப் குழுவின் 16 உறுப்பினர்கள் கடந்த வாரம் நாடாளுமன்றத்தால் அறிவிக்கப்பட்டனர். இந்தநிலையில் அதன் தலைவராக சுனில் ஹந்துன்நெத்தி மீண்டும் தெரிவுசெய்யப்பட்டார்.