முதலை கடிக்கு இலக்காகி மயிரிழையில் உயிர் தப்பிய மீனவர் !

download 3 1
download 3 1

கிளிநொச்சி- இரணைமடு குளத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர் ஒருவர் முதலை கடித்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவத்தில் 31 வயதான கிளிநொச்சியை சேர்ந்த அருணாச்சலம் – பரமேஸ்வரன் , என்பவரே படுகாயமடைந்துள்ளார்.

இரணைமடுக் குளத்தில் நன்னீர் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த சமயம் வலையினை வலித்துள்ளபோது முதலை ஒன்று வலையில் அகப்பட்டுள்ளது.

இந்நிலையில் முதலையினை விடுவித்து அவர் வலையை மீட்க முயன்றுள்ளார்.

இதன்போது திடீரென குறித்த மீனவர் மீது பாய்ந்த முதலை அவரின் இடது கையை கடித்து இழுத்துள்ளது.

எனினும் அவர் முதலையிடம் இருந்து விடுபட்டு கரை சேர்ந்த நிலையில் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.