நாட்டை கட்டியெழுப்புவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் – ஜனாதிபதி

1 aa 1
1 aa 1

எதிர்கால தலைமுறை பெருமைப்படக்கூடிய வகையில் நாட்டை கட்டியெழுப்புவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஆனந்தா கல்லூரியின் பழைய மாணவர்களுடனான சந்திப்பின்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

அந்தவகையில் எதிர்கால தலைமுறை பெருமைப்படக்கூடிய நாட்டை கட்டியெழுப்புவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு தனக்கு தெளிவான நோக்கு உள்ளது என்றும் அதனை தான் கொள்கை பிரகடனத்தின் மூலம் மக்களுக்கு முன்வைத்துள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது கூறினார்.

இந்த நிகழ்வில், அயோமா ராஜபக்ஷ அம்மையார், சபாநாயகர் கரு ஜயசூரிய, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாடசாலை பழைய மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.