குற்றப்புலனாய்வு பிரிவு விடுத்துள்ள கோரிக்கை

1
1

அடையாளத்தை உறுதிப்படுத்த முடியாத சமூக வலைத்தள கணக்குகளின் ஊடாக கிடைக்கும் கோரிக்கைகளுக்கு பதிலளிக்க வேண்டாம் என, குற்றப்புலனாய்வு பிரிவினர் அனைவரிடமும் கேட்டுக்கொண்டுள்ளனர்.


அத்துடன், தனது தேசிய அடையாள அட்டையை பயன்படுத்தி வேறு நபர்களுக்கு சிம் அட்டைகளை பெற்றுக்கொள்ள இடமளிக்க வேண்டாம் என்றும் தமது சமூக வலைத்தள கணக்குகளின் மின்னஞ்சல் மற்றும் கடவுச்சொற்களை மற்றவர்களுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டாம் என்றும் குற்றப்புலனாய்வு பிரிவினர் அறிவுறுத்தியுள்ளனர்.