கரைச்சி பிரதேச சபைக்கு முன்பாக தனிநபர் கவனயீர்ப்பு!

90 3
90 3

கிளிநொச்சி- கரைச்சி பிரதேச சபைக்கு முன்பாக தனிநபர் ஒருவர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர், தமக்கு அநீதி விளைவித்துள்ளதாக கூறியே அவர் பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் தனது உரிமைகளில் அத்து மீறுவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

கரைச்சி பிரதேச சபையின் தவிசாளரால் தனக்கு தீர்வு கிடைக்காத பட்சத்தில் யாழ்.ஆளுநரிடம் பதாதைகளை ஏந்திய துவிச்சக்கர வண்டியில் சென்று, மகஜர் ஒன்றினை கையளிக்க போவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர் தெரிவித்துள்ளார்.