இராஜகிரியவில் விபத்து 4 பேர் காயம்

1 d 2
1 d 2

இராஜகிரிய மேம்பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் 4 பேர் காயமடைந்துள்ளனரென பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பகுதியில் இன்று அதிகாலை இரண்டு கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதன் காரணமாக இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இதன் காரணமாக அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதனால் அப்பகுதியூடாக பயணிப்பவர்களை அவதானத்துடன் செயற்படுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.