மாங்குளம் வைத்தியசாலை அகழ்வுப் பணிகள் இடைநிறுத்தம்

1 Mullai 2 1
1 Mullai 2 1

முல்லைத்தீவு – மாங்குளம் வைத்தியசாலையின் தங்கி சிகிச்சை பெறும் புதிய அறைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மாங்குளம் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இந்த அகழ்வின்போது கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பில் கிளிநொச்சி சட்டவைத்திய அதிகாரியின் அறிக்கை கிடைக்கும் வரை இந்த பணிகள் நிறுத்தப்படுவதாக மாங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த அகழ்வுப்பணிகள் முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் எஸ்.லெனின்குமாரின் கட்டளையின் பேரில் மேற்கொள்ளப்பட்டன.

இந்த அகழ்வின்போது மனித எச்சங்கள், ஆடைகள் இரும்புத்துண்டுகள் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டன.

பொலிஸார், அகழ்வாராச்சி திணைக்கள அதிகாரிகள், பொலிஸ் குண்டு செயலிழக்க செய்யும் பிரிவினர் ஆகியோர் இந்த அகழ்வுப்பணிகளை மேற்கொண்டனர்.

மாங்குளம் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெறும் புதிய அறை ஒன்றை நிர்மாணிப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்ட போது மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டமையை அடுத்தே அங்கு அகழ்வுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.