கல்முனையில் ஒட்டப்பட்டுள்ள துண்டுப்பிரசுரங்கள்!

0 gg
0 gg

அம்பாறை – கல்முனையில் அமைந்துள்ள அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரின் செயற்பாட்டிற்கு எதிராகத் கலமுனை பகுதிகளில் பரவலாக துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன.

குறித்த துண்டுப்பிரசுரங்கள் யாவும் இன்று கல்முனையின் பிரதான வீதிகள் கடைகள் சந்தைகள் என்பவற்றில் ஒட்டப்பட்டுள்ளன.

இத்துண்டுப்பிரசுரத்தில் வெளியேறு..! வெளியேறு ரஹ்மான் வைத்தியட்சகரே வெளியேறு பாலியல் குற்றவாளிகளான தாதியர்களை வெளியேற்று எனக் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், எமது பிரதேசத்தில் அஷ்ஃரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அண்மைக்காலமாக இடம்பெற்று வருகின்ற பாலியல் ரீதியான செயற்பாடுகளைக் கண்டும் காணாமல் செயற்பட்டு வருகின்ற வைத்திய அத்தியட்சகர் ரஹ்மானை வெளியேற்றி புதிய நிர்வாகம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் உரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றோம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.