கல்முனைக்கு தமிழர் மாநகர முதல்வராகலாம் – கருணா ஆருடம்

4 rt
4 rt

சாய்ந்தமருதுக்கு தனியான நகரசபை கொடுத்துள்ளதால் தமிழர்களுக்குக்தான் கூடுதலான நன்மை கிடைத்துள்ளது. இதனால் கல்முனையில் எதிர்காலத்தில் தமிழர் ஒருவர் மாநகர முதல்வராக வரக்கூடிய வாய்ப்புக்கள் அதிகமுள்ளதென தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவதற்கு தடையாக இருந்தவர்கள் எல்லோரும் சாய்ந்தமருது நகரசபையுடன் இணைக்கப்பட்டுள்ளார்களென்றும் குறிப்பிட்டார்.

கிழக்குத் தமிழர்களையும், கிழக்கு மண்ணையும் பாதுகாக்கவே ஆயுதப்போராட்டத்தை கைவிட்டு ஜனநாயக வழிக்கு திரும்பியிருக்கின்றேன். தொடர்ச்சியாக என்னுடன் இணைந்திருந்தால் எம் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள், பொருளாதார தேவைகள், ஏனைய தேவைகள் என்பனவற்றை நிவர்த்தி செய்து கொடுத்தால் தான் எம் மக்கள் நிம்மதியாக வாழமுடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்