தினேஷ் குணவர்தன – மிச்செல் பச்லட் சந்திப்பு

8CI
8CI

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 43 ஆவது கூட்டத் தொடரில் பங்கேற்றுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன இன்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லட்டை சந்திக்கவுள்ளார்.

இதன்போது இலங்கை 30/1 அனுசரணையிலிருந்து விலகுவதாக உத்தியோக பூர்வமாக மனித உரிமை ஆணையாளரிடம் அமைச்சர் குணவர்த்தன அறிவிக்கவிருக்கிறார்.

நேற்று முன்தினம் பேரவையில் அவர் இதனை தெரிவித்தநிலையில் இன்றைய தினம் அதனை அவர் ஆணையாளரிடம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளார்.

அத்துடன் உள்ளகரீதியில் இந்தப் பிரச்சினையை இலங்கை எவ்வாறு ஆராயும் என்பது குறித்தும் மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்லட்டிடம் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன எடுத்துரைக்கவுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.