15 பில்லியன் ரூபா நிதியில் யாழில் 128 வீதிகள் இன்று பணிகள் ஆரம்பம்

high way
high way

யாழ் மாவட்டத்தில் ஐ ரோட் திட்டத்தில் 128 வீதிகள் 15 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் சீரமைக்கபடுகின்றன. அவற்றின் சீரமைப்பு பணிகளை யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் இன்று ஆரம்பித்து வைக்கிறார்.

15 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் மொத்தம் 273.24 கிலோ மீட்டர் நீளமுடைய வீதிகள் இந்த திட்டத்தில் சீரமைக்கப்படுகின்றன.

அதன்படி நுணாவில்- சரசாலை வீதி, மாமுனை- கட்ட காடு வீதி, மந்திகை-தம்பசிட்டி- அல்வாய் வீதி, உடுப்பிட்டி-மாலுசந்தி- அல்வாய் வீதி,தெல்லிப்பளை- திட்டி வீதி, தும்பளை வீதி, பிரான்பத்தை- பண்டத்தரிப்பு வீதி, மூளாய் வீதி பாலாவோடை- ஊரி வீதி, ஊரெழு- நீர்வேலி வீதி, பிறவுன் வீதி, இராசாவின் தோட்டம் வீதி, மண்கும்பான்- சாட்டி- வேலணை வீதி, ஊர்காவற்துறை- சுருவில்- சரவணை வீதி,ஆகிய வீதிகளிலே இன்று சம்பிரதாயபூர்வமாக சீரமைப்பு பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.