நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் விக்னேஸ்வரனைப் பதவியிலிருந்து அகற்றுவதற்கு தனது ஆதரவைக் கோரி நின்றதாக முன்னாள் வடமாகாண அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் யாழ் – மாவட்ட உறுப்பினர்களுக்கான சமகால அரசியல் தெளிவூட்டல் உரையரங்கு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் அவர்கள் சிறீதரனின் சதிமுயற்சியை அம்பலப்படுத்தினார்.
தம் பக்கம் வந்தால் தான் வகித்துவந்த அமைச்சர் பதவியைத் தொடரலாம் என சிறீதரன் தெரிவித்தபோதிலும் அப்படி ஒரு செயலைச் செய்து அந்தப் பதவியை தக்கவைப்பதில் தனக்கு உடன்பாடில்லாத காரணத்தால் சிறீதரனின் வேண்டுகோளைத் தான் நிராகரித்தாக ஐங்கரநேசன் குறிப்பிட்டார்.
வடமாகாண சபையில் விக்னேஸ்வரனை முதலமைச்சர் பதவியிலிருந்து அகற்குவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒரு பகுதியினர் மேற்கொண்ட சதிமுயற்சிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களும் உறுதுணையாக இருந்தார் எனப் பரவலாகச் சந்தேகிக்கப்பட்டது. அந்த சந்தேகம் ஐங்கரநேசன்மூலம் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது.