பாடசாலை மாணவர்களுக்கு போதை அடங்கிய இனிப்பு விநியோகம்!

grade 1 school children Sri Lanka
grade 1 school children Sri Lanka

கண்டியில் உள்ள பாடசாலை ஒன்றில் மாணவர்களுக்கு விநியோகிக்கப் பட்டதாகக் கூறப்படும் போதை அடங்கிய இனிப்பு உணவு ஒன்று தொடர்பாக விசாரணைகள் நடத்தப்படுகின்றன.

6,7,8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த இனிப்பு உணவு விநியோகிக்கப்பட்டுள்ளது.

வெளியாரால் வழங்கப்பட்ட இந்த இனிப்பு உணவை உயர்தர மாணவர்கள் குறித்த மாணவர்களுக்கு விநியோகித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இனிப்பு உணவை உட்கொண்ட 6 ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் கண்டி பண்டாரநாயக்க வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னரே இந்த விடயம் தெரிய வந்தது.

இந்த இனிப்பு பண்டத்தை பலவந்தமாக விநியோகித்ததாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.