பாராளுமன்ற உறுப்பினராக இருப்பவர்களுக்கு மீண்டும் சந்தர்ப்பம் வழங்க வேண்டாம்- எம்.ஏ.சுமந்திரன்

download 1
download 1

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களில் மூன்று பேர் தோற்று தான் ஆக வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை தெரிவு செய்யும் போது திறந்து மனப்பான்மையுடன் தகுதி உடையவர்களுக்கு இடம் கொடுக்க வேண்டுமே தவிர ஏற்கனவே பாராளுமன்ற உறுப்பினராக இருப்பவர்களுக்கு மீண்டும் சந்தர்ப்பம் வழங்க வேண்டாம் எனவும் , தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று முன்தினம் சனிக்கிழமை இடம்பெற்ற மக்கள் கருத்தறியும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இளைஞர்கள், பெண்களுக்கு உரிய இடம் கொடுக்கப்படவில்லை என்பதை நான் ஏற்றுக் கொள்கின்றேன். அதை நான் வெளிப்படையாகவும் கட்சிக்குள்ளும் விமர்சித்து வந்தேன் எனவும் தெரிவித்தார்.