10 வருடங்களாக அடிப்படை வசதிகள் ஏதும் இன்றி பரிதவிக்கும் கணேசபுரம். மக்கள்பிரதேச செயலகத்தினால் கண்டு கொள்ளப்படாத நிலை!

IMG 7739
IMG 7739

(01-03-2020)
மன்னார் மாந்தை பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட வெள்ளாங்குளம் சேவா கிராமம் பகுதியை சேர்ந்த மக்கள் குறித்த பகுதியில் குடியேறி 10 வருடங்கள் கடந்தும் இதுவரை அடிப்படைவசதிகள் இன்றி காணி உறுதிப்பத்திரங்கள் கூட வழங்கப்படாத நிலையில் சொந்த வீடுகளில் அகதிகளாக வாழும் நிலையில் தள்ளப்பட்டுள்ளனர்.
2012 ஆண்டு இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வீட்டுத்திட்டத்தின் அடிப்படையில் யுத்ததால் பாதிக்கப்பட்ட கணவனால் கைவிடப்பட்ட விதவைகள் ஊணமுற்றோர்கள் என்ற அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட பயனாலிகளிக்கு காட்டு பகுதி ஒன்றை துப்பரவு செய்து இந்திய அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டில் வீட்டுதிட்டம் வழங்கப்பட்டது.
இருப்பினும் வீடுகள் ஒழுங்கான முறையில் அமைக்கப்படத காரணத்தால் தற்போது அனேகமான வீடுகள் உடைந்த நிலையில் காணப்படுகின்றது. அது மாத்திரம் இன்றி அடிப்படை வசதிகளான போக்குவரத்து வீதிகள், வைத்திய சாலை என எதுவுமே 8 வருடங்கள் கடந்த நிலையில் வழங்கப்படவில்லை.
அத்துடன் குறித்த காணிகளுக்கான உறுதிபத்திரத்தினை உடனடியாக மக்களுக்கு வழங்குமாறு மாகாண காணி ஆணையாளரினால் கடிதம் அனுப்பப்பட்ட போதிலும் இதுவரை வீடுகளுக்கான காணி ஆவணங்களோ உறுதி பத்திரங்களோ பிரதேச செயலகத்தினால் இதுவரை வழங்கப்படவில்லை எனவும் இவை தொடர்பாக பிரதேச செயலாளர் மற்றும் உரிய அதிகாரிகளுக்கு தெரியப்படுத்திய போதிலும் அலட்சியமாக பதில் அளிப்பதாகவும் மக்களை மதிக்காது செயற்படுவதாகவும் இந்தியன் வீட்டு திட்டம் கணேசபுரம் கிராம மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
குறித்த மக்களின் காணிப்பிரச்சினை தொடர்பாகவும் மக்களுக்கான காணி உரிமைகள் தொடர்பாக இன்றையதினம் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனம் மெசிடோ நிறுவனத்தின் ஏற்பாட்டில் முன்னால் கிழக்கு மாகாண காணி ஆணையாளரும் காணிதொடர்பான நிபுனத்துவ ஆலோசகரும் காணி விசேட மத்தியஸ்தக சபையின் மட்டக்களப்பு மாவட்ட தவிசாளருமான K.குருநாதன் ஊடாக விசேட விளக்கமலிக்கும் கூட்டம் இடம் பெற்றதுடன் 
குறித்த மக்களின் பிரச்சினைகளை தொடர்சியாக அலட்சியம் செய்யும் பிரதேச செயலாளர் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு பதிவு செய்வது தொடர்பாகவும் அதே நேரத்தில் மேல் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்வது தொடர்பாகவும் மக்களின் முடிவும் பரிசீலிக்கப்பட்டது.