சிறப்பாக இடம் பெற்ற மனித உரிமைகளுக்கான சமாதான தூதுவர்களின் அமைப்பின் மன்னார் மாவட்டத்தின் அறிமுகம்.

DSC 0205
DSC 0205

(01-03-2020)
மனித உரிமைகளுக்கான சமாதான தூதுவர்களின் அமைப்பின் மன்னார் மாவட்டத்தின் அறிமுகம் மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை (1) மதியம் மாந்தை மேற்கு பிரதேசச் செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது.
மனித உரிமைகளுக்கான சமாதான தூதுவர்களின் அமைப்பின் இணைப்பாளர் சி.சிறிஸ்கந்தராஜா தலைமையில் குறித்த நிகழ்வு இடம் பெற்றது.
குறித்த நிகழ்விற்கு விருந்தினர்களாக மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் எஸ்.கேதீஸ்வரன்,மனித உரிமைகளுக்கான சமாதான தூதுவர்களின் அமைப்பின் பணிப்பாளர் எம்.எஸ்.சாதீக்,தூய ஜோசப்வாஸ் மகா வித்தியாலய அதிபர் எம்.கிறிஸ்ரியான்,மன்னார் பிரதேச சபையின் செயலாள் என்.சிவயோகராஜா உற்பட பலர் கலந்து கொண்டனர்.
இதன் போது மனித உரிமைகளுக்கான சமாதான தூதுவர்களின் அமைப்பின் மன்னார் மாவட்டத்தின் அறிமுகம் இடம் பெற்றதோடு,அவர்களின்  செயற்பாடுகள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டதோடு,அங்கத்தவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.