கிளிநொச்சி இளம் கலைஞர்களின் ‘எதிர்பார்த்த விழிகள்’, ‘உறையாத குருதி’ வெளியிடப்பட்டன.

images 1
images 1

கிளிநொச்சி மாவட்ட இளைஞர்களின் படைப்புக்களை ஊக்கப்படுத்தவும் சமூக விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் நோக்கிலும் ‘உறையாத குருதி’ என்னும் குறும் திரைப்படம் மற்றும் எதிர் பார்த்த விழிகள்’ என்னும் காணொளி பாடல் என்பவை வெளியிடப்பட்டன.

குறும்பட இயக்குனர் தர்ஷன் இயக்கத்தில் உருவான இரண்டு படைப்புகளும் யாழ் அச்சுநகர், குருசுமுத்து, ஜோ.ஆன்ரனி கல்வி அபிவிருத்தி நம்பிக்கை நிதியத்தின் அனுசரணையில் மித்திரசேனை குழுமத்தினரால் கடந்த சனிக்கிழமை வெளியிட்டு வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், சமூக ஆர்வலர்கள், படைப்பாளிகள், கலைஞர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.